டெக் மஹிந்திராவில் முதலீட்டை அதிகரித்தது எல்ஐசி

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவில் தனது பங்கு முதலீட்டை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அதிகரித்துள்ளது.
டெக் மஹிந்திராவில் முதலீட்டை அதிகரித்தது எல்ஐசி

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவில் தனது பங்கு முதலீட்டை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அதிகரித்துள்ளது.

இது குறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் 1.9 கோடி பங்குகளை, சராசரியாக தலா ரூ.1,050.77-க்கு எல்ஐசி வாங்கியுள்ளது. இது டெக் மஹிந்திராவின் ஒட்டுமொத்த பங்கு மூலதனத்தில் 2.01 சதவீதம் ஆகும்.

இந்த கூடுதல் பங்குகள் கடந்த ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதிக்கும், இந்த ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும் இடையே சுமாா் ரூ.2,000 கோடிக்கு வாங்கப்பட்டன.

இந்த பங்கு கொள்முதலையடுத்து, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் எல்ஐசி-யின் பங்கு 8.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதற்கு முன்னா் இது 6.86 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com