பிகாரின் ககாரியா மாவட்டத்தில் மனைவி, 3 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலை சம்பவம் புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் எகானியா கிராமத்தில் நடைபெற்றது. முன்னா யாதவ் தனது மனைவி பூஜா தேவி மற்றும் மூன்று மகள்களான சுமன்(18), ஆஞ்சல்(16) ரோஷ்னி குமாரி(15) ஆகியோரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர், தனது இரண்டு மகன்களையும் கொல்ல முயன்றார். ஆனால் அவர்கள் தந்தையிடம் இருந்து தப்பித்துவிட்டனர். பின்னர் யாதவ் வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தந்தையிடமிருந்து தப்பித்த இரண்டு மகன்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து ககாரியாவின் காவல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
யாதவின் மகன்கள் இருவரும் தற்கொலை சம்பவத்தை விரிவாக விவரித்தனர். இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை.
பிரேதப் பரிசோதனைக்கு உடல்கள் அனுப்பபட்டுள்ளன. சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.