ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
Published on

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

காஷ்ரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 270 கி.மீ ஒரே நெடுஞ்சாலை இதுவாகும். இப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகிறது. 

இந்நிலையில், ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உருண்டுவிழுந்த கற்களை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை முதல் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com