ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை நீக்கி இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி

பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஜூன் 2023, 11:45 am IST

பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்தது. இளைஞர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதை தங்களது கனவாக கொண்டிருந்தனர். ஆனால், இன்று அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டன. கடந்த 2014 ஆம் ஆண்டு 16.9 லட்சமாக இருந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 14.6 லட்சமாக குறைந்துள்ளது.

வளர்ச்சியை நோக்கியை செல்லும் நாட்டில் இது போன்று வேலைவாய்ப்புகள் குறையுமா? 1,81,127 பேர் பிஎஸ்என்எல்-ல் இருந்து வேலையை இழந்துள்ளனர். ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். ஆனால், வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கு பதில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை நீக்கியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.