இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அசாம் வெள்ளம்: 5 லட்சம் பேர் பாதிப்பு; காய்கறிகள் விலை கடும் உயர்வு!

அசாமில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

News image
Updated On :25 ஜூன் 2023, 5:09 am

DIN

அசாமில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

10 ஆயிரம் ஹெக்டருக்கும் அதிகமான வயல்கள் நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜாலி, நல்பாரி, பர்பீட்டா, தம்லூர், பக்சா, கோஹல்பாரா ஆகிய மாவட்டங்களில் சுமார் 4.89 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

16 மாவட்டங்களில் 54 பஞ்சாயத்துகளுக்குட்பட்ட 1, 538 கிராமங்களிலுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா நதியில் அபாயகட்டத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால், பல இடங்களில் சாலைகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலுமாக முடகியுள்ளன. இதனால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தாழ்வான இடங்களிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுவரை 140 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிவாரண பொருள்களை விநியோகம் செய்ய 75 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.