தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

வடகிழக்கில் பிரதமர் மோடியின் முயற்சியால் வெற்றி கிடைத்தது: அசாம் முதல்வர்

வடகிழக்கில் பிரதமர் மோடியின் முயற்சியால் வெற்றி கிடைத்தது என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 12:10 pm IST

வடகிழக்கில் பிரதமர் மோடியின் முயற்சியால் வெற்றி கிடைத்தது என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி மீது வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர். மேகாலயாவைத் தவிர, இரண்டு மாநிலங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். இது மக்களவைத் தேர்தலிலும் குறைந்தபட்சம் 25-26 இடங்களையாவது வெல்வோம் என்பதை தெளிவாக உறுதி செய்கிறது. வடகிழக்கில் பிரதமர் மோடியின் முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது.

திரிபுராவில் பதவியேற்பு விழா மார்ச் 8 ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் மார்ச் 7 ஆம் தேதியும் நடைபெறலாம். 

திரிபுராவில் உள்ள பாஜக தலைவர்கள் பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை அழைத்துள்ளனர். பிரதமர் வடகிழக்கு மற்றும் இங்குள்ள மக்களை நேசிக்கிறார். பிரதமர் மோடி வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

திரிபுராவில் பாஜக - திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இங்கு பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதேபோல், நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) -பாஜக கூட்டணி வெற்றி பெற்று, தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. மேகாலயத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு தொங்கு பேரவை உருவாகியுள்ளது. பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆளும் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.