பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மாநிலங்களவையில் ஆர்ஆர்ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுக்களுக்கு வாழ்த்து

மாநிலங்களவை கூட்டத்தொடரில் ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படங்களின் குழுக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Published On :

மாநிலங்களவை கூட்டத்தொடரில் ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படங்களின் குழுக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த மூலப்பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும் விருதை வென்றது.

இந்த இரு படங்களின் குழுக்களுக்கு இன்றைய மாநிலங்களவை கூட்டத்தொடரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வென்ற படக்குழுக்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியதாவது:

“ஆஸ்கர் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இந்திய கலைஞர்களின் பரந்த திறமை, மகத்தான படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த சாதனைகள் மூலம் உலகளாவிய பாராட்டைப் பிரதிபலிக்கின்றன. நமது உலகளாவிய எழுச்சி மற்றும் அங்கீகாரத்துக்கான மற்றொரு அம்சம் இது.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.