தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மாநிலங்களவையில் ஆர்ஆர்ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுக்களுக்கு வாழ்த்து

மாநிலங்களவை கூட்டத்தொடரில் ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படங்களின் குழுக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :14 மார்ச் 2023, 11:34 am IST

மாநிலங்களவை கூட்டத்தொடரில் ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படங்களின் குழுக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த மூலப்பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும் விருதை வென்றது.

இந்த இரு படங்களின் குழுக்களுக்கு இன்றைய மாநிலங்களவை கூட்டத்தொடரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வென்ற படக்குழுக்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியதாவது:

“ஆஸ்கர் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இந்திய கலைஞர்களின் பரந்த திறமை, மகத்தான படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த சாதனைகள் மூலம் உலகளாவிய பாராட்டைப் பிரதிபலிக்கின்றன. நமது உலகளாவிய எழுச்சி மற்றும் அங்கீகாரத்துக்கான மற்றொரு அம்சம் இது.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.