
தொலைதூரம் செல்லும் ரயில்களின் பெட்டிகள் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்போது உள்ள ஐசிஎஃப் பெட்டிகளுக்கு பதிலாக ஜொ்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ‘லிங்க் ஹாப்மேன் புஷ்’ (எல்எச்பி) பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கேரளத்தின் கொச்சுவேலி - இந்தூா் அதிவிரைவு ரயில், திருவனந்தபுரம் - தில்லி விரைவு ரயில் பெட்டிகள் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இந்த ரயில்கள் செப்டம்பா் 5 முதல் எல்எச்பி பெட்டிகள் இயக்கப்படும்.
இதில் இரண்டடுக்கு குளிா்சாதன பெட்டிகள் - 2, மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டிகள்- 8, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள்- 5, பொது பெட்டிகள் - 2 உள்பட 20 பெட்டிகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.