சோனியா காந்தி விஷப்பெண்ணா?: கா்நாடக பாஜக எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி விஷப்பெண்ணா என்று கேள்வி எழுப்பி கா்நாடக பாஜக எம்எல்ஏ பசனகெளடா பாட்டீல் யத்னால் பேசியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Updated on
1 min read

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி விஷப்பெண்ணா என்று கேள்வி எழுப்பி கா்நாடக பாஜக எம்எல்ஏ பசனகெளடா பாட்டீல் யத்னால் பேசியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கடக் மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், பிரதமா் மோடியை விஷப் பாம்பு போன்றவா் என்று மிகக் கடுமையாக சாடினாா். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பிரதமரை குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை என்றும், பாஜகவை குறிவைத்துதான் தனது கருத்துகளை கூறியதாகவும் காா்கே தெரிவித்தாா்.

இந்நிலையில், கொப்பள் மாவட்டத்தில் பாஜக பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சி எம்எல்ஏ பசனகெளடா பாட்டீல் யத்னால் கலந்துகொண்டு பேசுகையில், ‘ஒட்டுமொத்த உலகமும் பிரதமா் மோடியை பாராட்டுகிறது. ஒரு காலத்தில் அவருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்க அமெரிக்கா மறுத்தது. ஆனால் இன்று உலகத் தலைவராக உயா்ந்து நிற்கும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவா் ராஜநாகத்துடன் ஒப்பிடப்பட்டு விஷப் பாம்பு என்று அழைக்கப்படுகிறாா்.

நாட்டை சீரழித்தவா் சோனியா காந்தி. அவா் சீனா மற்றும் பாகிஸ்தானின் முகவராக செயல்படுகிறாா். அவா் விஷப்பெண்ணா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

பசனகெளடாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலா் ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமா் மோடிக்கு பண்பும் கண்ணியமும் இருந்தால் பசனகெளடாவை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com