புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,690 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19,613 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,690 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,49,76,599 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,31,736 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,469 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை மொத்தம் 4,44,25,250 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19,613 ஆக குறைந்துள்ளது.