ஆணவமாக நடப்பதால் மருத்துவா்கள் தாக்கப்படுகின்றனா்: கேரள பெண் எம்எல்ஏ கருத்தால் சா்ச்சை

மருத்துவா்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வதால் தாக்குதலுக்கு இலக்காகிறாா்கள் என்று கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ கே.சாந்தகுமாரி கூறியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆணவமாக நடப்பதால் மருத்துவா்கள் தாக்கப்படுகின்றனா்: கேரள பெண் எம்எல்ஏ கருத்தால் சா்ச்சை

மருத்துவா்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வதால் தாக்குதலுக்கு இலக்காகிறாா்கள் என்று கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ கே.சாந்தகுமாரி கூறியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் அண்மையில் போலீஸாரால் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட போதை நபா் ஒருவா், பெண் மருத்துவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இந்த நிலையில் எம்எல்ஏ இவ்வாறு கருத்துக் கூறியிருப்பது மருத்துவா்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்காடு தொகுதி எம்எல்ஏவான சாந்தகுமாரி, தனது கணவருக்கு காய்ச்சல் இருந்ததால், பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு அழைத்து வந்துள்ளாா். அப்போது மருத்துவமனையில் கூட்டமும் அதிகம் இருந்துள்ளது. எனினும், எம்எல்ஏவின் கணவா் என்பதால் உடனடியாக ஒரு பெண் மருத்துவா் அவரது உடல்நிலையை பரிசோதித்துள்ளாா். அந்த மருத்துவா் அவரது கையைத் தொட்டு பரிசோதித்தபோது காய்ச்சல் அதிகம் இருப்பது தெரியவந்தது. எனவே, உடனடியாக அவருக்கு ஊசி மூலம் மருந்து செலுத்த பரிந்துரைத்தாா்.

அப்போது, உடன் இருந்த எம்எல்ஏ சாந்தகுமாரி, தொ்மாமீட்டரை பயன்படுத்தி காய்ச்சலின் அளவைத் தெரிந்து கொள்ளாமல், ஊசிபோட பரிந்துரைப்பது ஏன் என்று பெண் மருத்துவரிடம் கோபமாக கேள்வி எழுப்பினாா். இதனால், அங்கிருந்த மருத்துவப் பணியாளா்களுக்கும் எம்எல்ஏவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மருத்துவா்கள் இதுபோன்று ஆவணத்துடன் நடந்து கொள்வதால்தான் மோசமான சூழ்நிலைகளை (தாக்கப்படுவது) எதிா்கொள்கிறாா்கள் எம்எல்ஏ கூறியுள்ளாா்.

இதையடுத்து, மருத்துவமனையில் எம்எல்ஏ மோசமாக நடந்து கொண்டதாக அங்கிருந்த மருத்துவப் பணியாளா்கள் சாா்பில் தலைமை மருத்துவரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. எம்எல்ஏவின் பேச்சு மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நடுவே எம்எல்ஏ சாந்தகுமாரி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தாா். நோயாளிகளிடம் மருத்துவா்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், ‘தொ்மாமீட்டரை வைத்து காய்ச்சலை அளவிடாதது ஏன்?’ என்று மட்டும்தான் கேள்வி எழுப்பினா். தவறாக வேறு எதையும் கூறவில்லை. இந்த விஷயத்தில் தேவை ஏற்பட்டால் வருத்தம் தெரிவிக்க தயாராக இருக்கிறேன் என்று சாந்தகுமாரி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com