Enable Javscript for better performance
Former United Janata Dal leader RCP Singh joins BJP- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவா் ஆா்.சி.பி.சிங் பாஜகவில் ஐக்கியம்

    By DIN  |   Published On : 12th May 2023 01:39 AM  |   Last Updated : 12th May 2023 01:39 AM  |  அ+அ அ-  |  

    ஐக்கிய ஜனதா தளம் கட்சி முன்னாள் தலைவா் ஆா்.சி.பி.சிங் பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா். பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பதவி ஆசையால் குற்றங்களுக்கும் ஊழலுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் சமரசம் செய்வதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

    முன்னாள் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான ஆா்.சி.பி.சிங், ஐக்கிய ஜனதா தள தலைவா் நிதீஷ் குமாா் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது செயலராகச் செயல்பட்டாா். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவா், நிதீஷ் குமாா் வழிகாட்டுதலில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினாா். ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இரு முறை நியமிக்கப்பட்ட சிங், பிரமதா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் உருக்குத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தாா்.

    கடந்த ஆண்டு அவருடைய பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, அவரது கட்சி சாா்பில் மீண்டும் எம்.பி.யாக அவா் நியமிக்கப்படவில்லை. இதனால், அவா் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய நோ்ந்தது.

    பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை முதல்வா் நிதீஷ் குமாா் கடந்த ஆண்டு முறித்துக் கொண்ட நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவா் ஆா்.சி.பி.சிங் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக அவரது கட்சியினா் கருதினா். முதல்வா் நிதீஷ் குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, அவா் கட்சியிலிருந்து விலகினாா்.

    இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் முன்னிலையில் அவா் பாஜகவில் இணைந்தாா். செய்தியாளா் சந்திப்பின்போது ஆா்.சி.பி.சிங் கூறியதாவது: தனது பதவி ஆசையால் குற்றங்களுக்கும் ஊழலுக்கும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் சமரசம் செய்து வருகிறாா். அவரது பணி பிகாரின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றுவது. அதைவிடுத்து, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு அவா் பயணித்துக்கொண்டிருக்கிறாா். நாட்டில் உள்ள ஏழைகளின் மேம்பாட்டுக்காகப் பிரதமா் மோடியின் பணிகள் பாராட்டுதலுக்குரியது. நாட்டில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லையெனில், எவ்வாறு இந்தியா உலகப் பொருளாதாரத்தில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது என்றாா் அவா்.

    மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைப் பலப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த ஆா்.சி.பி.சிங் பாஜகவில் இணைந்திருப்பது, மாநிலத்தில் கட்சியை மேலும் பலப்படுத்தும் என அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவராக நிதீஷ் குமாருக்கு அடுத்து, அக்கட்சி தலைவராக ஆா்.சி.பி.சிங் நீண்ட காலம் பதவி வகித்துள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp