

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள நிதின் கட்கரியின் வீட்டிற்கு திங்கள்கிழமை மாலை போன் செய்த மர்ம நபர், அவரைக் கொலை செய்யவுள்ளதாக பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நிதின் கட்கரி வீட்டின் பணியாளர்கள் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து தில்லி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நாகபூரில் உள்ள மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் முகாம் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் பெலகாவி சிறையிலுள்ள குற்றவாளி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.