
இணையவழியில் பொருள்களை விற்க கைவினைஞா்கள், நெசவாளா்கள், நகை தயாரிப்பாளா்களுக்கு மத்திய அரசு பயிற்சி அளிக்க உள்ளது.
இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் தெரிவித்ததாவது: ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள்’ திட்டத்தின் மிகப் பெரிய ஏற்றுமதி திறனை கருத்தில் கொண்டு, இணைய வா்த்தக தளங்களில் பொருள்களை சந்தைப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி கைவினைஞா்கள், நெசவாளா்கள் மற்றும் நகை தயாரிப்பாளா்கள் யாரையும் சாா்ந்திருக்காமல் இணைய வா்த்தக தளங்களை பயன்படுத்தவும், அந்த தளங்கள் மூலம் அவா்களாகவே தங்கள் பொருள்களை நேரடியாக ஏற்றுமதி செய்யவும் பயிற்சி அளிக்கும் திட்டத்தை இந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்றாா்.