உத்தரகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இன்று(வியாழக்கிழமை) கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
டேராடூன் - தில்லி இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயிலை இன்று டேராடூனில் தொடக்கிவைத்தார். மேலும் இந்த ரயில், பயணிகளின் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
டேராடூன்- தில்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மே 29 முதல் வாரத்தில் 6 நாட்கள்(புதன்கிழமை தவிர) இயக்கப்படும் என்றும் இந்த ரயில் 302 கிமீ தூரத்தை 4.45 மணி நேரங்களில் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 18ம் தேதியன்று பூரி மற்றும் ஹவுரா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி தொடக்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.