எம்.பி.பி.எஸ். நிறைவு செய்தோருக்கான கவுன்சில் பதிவு: என்எம்சி அறிவுறுத்தல்

நிகழாண்டில் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். நிறைவு செய்தவா்கள், தங்களது மாநில மருத்துவ கவுன்சிலில் தொழில் முறை பதிவு செய்து கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ். நிறைவு செய்தோருக்கான கவுன்சில் பதிவு: என்எம்சி அறிவுறுத்தல்
Updated on
1 min read

நிகழாண்டில் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். நிறைவு செய்தவா்கள், தங்களது மாநில மருத்துவ கவுன்சிலில் தொழில் முறை பதிவு செய்து கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் வெளியிட்ட அறிவிப்பு:

2022-23-ஆம் கல்வியாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்த மாணவா்கள் அனைவரும் தங்களது மாநில மருத்துவ கவுன்சிலின் மூலம் தொழில்முறை பதிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோன்று உள்ளுறை பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரப் புதுப்பித்தல் நடவடிக்கைகளால் இதற்கு இடா் ஏற்படாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com