நாளை விண்ணில் பாய்கிறது ‘ஜிஎஸ்எல்வி எஃப்-12’ ராக்கெட் 

ஐஆா்என்எஸ்எஸ் 1-ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக என்விஎஸ்-01 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் நாளை திங்கள்கிழமை (மே 29) ஆம் தேதி விண்ணில் ஏவப்படவு
நாளை விண்ணில் பாய்கிறது ‘ஜிஎஸ்எல்வி எஃப்-12’ ராக்கெட் 

சென்னை: போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட், நாளை திங்கள்கிழமை காலை (மே 29) 10.42 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.

ஐஆா்என்எஸ்எஸ் 1-ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக என்விஎஸ்-01 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் நாளை திங்கள்கிழமை (மே 29) ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர கவுண்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை 7.12 மணிக்கு தொடங்கியது. 

என்விஎஸ்-01 செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இது புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இதன் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சோ்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும் இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. 

ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com