
மிஸோரத்தில் வாக்களிக்க வரிசையில் நின்ற மக்கள்.
காலை 11 மணி நிலவரப்படி சத்தீஸ்கர் முதற்கட்டத் தேர்தலில் 22.97% வாக்குகளும் மிஸோரத்தில் 26.43% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
சத்தீஸ்கா் மாநிலத்தில் நாராயண்பூா், தண்டேவாடா, பிஜபூா், கோன்டா, கேன்கா் உள்ளிட்ட 10 தொகுதிகளில் இன்று காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரையும், இதர 10 தொகுதிகளில் காலை 7 முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையும் படிக்க | குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி சத்தீஸ்கர் மாநில முதற்கட்டத் தேர்தலில் 22.97% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதுபோல, மிஸோரமின் 40 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
மிஸோரத்தில் காலை 11 மணி நிலவரப்படி, 26.43% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...