மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடும்பத்தினருடன் வாக்களித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இன்று காலை  புத்னி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

News image
குடும்பத்தினருடன் வாக்களித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.
Updated On :17 நவம்பர் 2023, 6:42 am

DIN

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இன்று காலை  புத்னி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ. 17) காலை பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று தோ்தல் நடைபெறுகிறது. மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இன்று காலை  புத்னி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மனைவி மற்றும் மகன்களுடன் குடும்பத்துடன் வந்து வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முதல்வர் பதவி எனக்கு முக்கியமானது அல்ல. அது கட்சிதான் முடிவு செய்யும். மத்திய பிரதேச மாநிலமும் இந்த நாடும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய வரலாற்று வெற்றியை அடையும். காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறாது. அவர்கள் பதவிக்கு வந்தால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது. 

மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பாஜகவுக்கு மக்களின் அன்பும் ஆதரவும் உள்ளது' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.