இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பிரிஜ் பூஷண் சிங்கை மறக்க முடியுமா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

ராஜஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு, 'பாஜகவின் பிரிஜ் பூஷண் சிங்கை மறக்க முடியுமா?' என்று காங்கிரஸின் கௌரவ் வல்லப கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
பிரிஜ் பூஷண் சிங் | போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகள்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:23 am

DIN

ராஜஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு, 'பாஜகவின் பிரிஜ் பூஷண் சிங்கை மறக்க முடியுமா?' என்று காங்கிரஸின் கௌரவ் வல்லப கேள்வி எழுப்பியுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்தில் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியை குற்றம்சாட்டி பேசி வருகிறார். 

அப்போது பாலி பகுதியில் பேசிய பிரதமர் மோடி 'ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, முதல்வர் அசோக் கெலாட் பெண்களை அவமதிக்கிறார்' என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப, 'ராஜஸ்தானில் பிரதமர் மோடி கூறிய அனைத்து குற்றங்களும் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல நாங்கள் வழக்குப்பதிவு செய்யாமல் இல்லை. ஆனால் ஒரு சில மாநிலங்களில் பெரிய குற்றங்களைக்கூட பதிவு செய்வதில்லை.

நாங்கள் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை எப்போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், பாஜக அவர்களைத்தான் ஆதரிக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு ஆதரவாக பாஜக இருப்பதில்லை. பிரிஜ் பூஷண் சிங்கை மறக்க முடியுமா? பிரதமர் மோடி, மல்யுத்த வீராங்கனைகளின் பக்கம் நிற்காமல் வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த  பிரிஜ் பூஷணுக்கு ஆதரவாக போராட்டம் செய்கிறார். 

இந்தியாவில் மகள்களை பாதுகாப்பதாகக் கூறும் பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவாக இல்லை. அது ஏன்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்தத்துடன் மிகப்பெரிய போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இது தொடர்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.