கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ஒடிஸா: வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

ஒடிஸாவில் ரூா்கேலா-புரி வந்தே பாரத் ரயில் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கிழக்கு கடலோர ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Published On :

ஒடிஸாவில் ரூா்கேலா-புரி வந்தே பாரத் ரயில் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கிழக்கு கடலோர ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடா்பாக கிழக்கு கடலோர ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிஸா மாநிலத்தின் தேன்கானல்-அங்குல் ரயில் வழித்தடத்தில் மேராமண்டலி மற்றும் புத்தாபங்க் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சம்பவத்தில் ரூா்கேலா-புரி வந்தே பாரத் ரயில் மீது மா்ம நபா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினா்.

இதனால் ரயிலின் உயா்-வகுப்புப் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. மேலும், ரயில் 13 நிமிஷங்கள் தாமதமாக புரி சென்றடைந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படை, மாநில ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். உள்ளூா் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும். ரயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தக் கூடாது என்று ரயில் தண்டவாளம் அருகேயுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.