உத்தரகண்ட் சுரங்க விபத்து: 41 தொழிலாளா்கள் மீட்பு முடிவுக்கு வந்தது 17 நாள் போராட்டம்
உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளா்களும் 17 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

சுரங்கப் பாதை இடிபாடுகளிலிருந்து மீட்டு வரப்பட்ட தொழிலாளா்களை நெகிழ்ச்சியுடன் வரவேற்ற உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்.







