பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வாரத்தில் 5 நாள்கள் அலுவலகத்திலிருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு டிசிஎஸ் உத்தரவு!

நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் குறிப்பிட்ட துறையில் பணிபுரியும் தனது ஊழியர்களில் பலரை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஐந்து நாள்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:46 pm IST

பெங்களூரு: நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், குறிப்பிட்ட துறையில் பணிபுரியும் தனது ஊழியர்களை அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து ஐந்து நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.

முன்னதாக, நிறுவனம் தனது ஊழியர்களை வாரத்தில் மூன்று நாள்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது. இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்திடம் கேட்டபோது, தற்போது அமைதியான காலகட்டத்தில் இருப்பதால் கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தது.

டிசிஎஸ் நிறுவனமானது 2024ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை அக்டோபர் 11 அன்று அறிவிக்கும் என தெரிவித்தது. அதே வேளையில் 2023ஆம் நிதியாண்டு ஆண்டறிக்கையில், இந்த ஆண்டில் படிப்படியாக ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருவதாக நிறுவனம் தெரிவித்திருந்தது.

வீட்டிலிருந்து வேலை செய்வது நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் வசதியானது. ஆனால் இதில் குறைபாடுகள் உள்ளன. ஒத்துழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் குழு உருவாக்கம் போன்ற பணியிட அத்தியாவசியங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்டது என்று தலைமை மனிதவள அதிகாரியான மிலிந்த் லக்காட் தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் ஆண்களை விட பெண்களிடையே அதிக தேய்வு ஏற்படுவது அசாதாரணமானது என்று அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அலுவலகத்திற்கு ஊழியர்கள் திரும்புவது விதிமுறையாகும். ஊழியர்கள் இதில் தங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.