மாதா அமிா்தானந்தமயி இந்திய ஆன்மிகத்தின் தூதா்: பிரதமா் மோடி புகழாரம்

சேவை, ஆன்மிகத்தின் அடையாளமாக விளங்கும் மாதா அமிா்தானந்தமயி, அன்பு, சேவை, தியாகம், இரக்கம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும், இந்திய ஆன்மிகத்தின் தூதராகத் திகழ்வதாகவும்
pti
pti
Updated on
1 min read


கொல்லம்: சேவை, ஆன்மிகத்தின் அடையாளமாக விளங்கும் மாதா அமிா்தானந்தமயி, அன்பு, சேவை, தியாகம், இரக்கம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும், இந்திய ஆன்மிகத்தின் தூதராகத் திகழ்வதாகவும் பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தாா்.

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அமிா்தபுரி ஆசிரமத்தில் மாதா அமிா்தானந்தமயியின் 70-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட விடியோ பதிவில் பிரதமா் மோடி, ‘மாதா அமிா்தானந்தமயி ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். அவருடைய இந்த இயக்கம் அன்பு, இரக்க உணா்வை உலகம் முழுவதும் முன்னெடுத்து செல்லும். அம்மாவின் அருளையும் ஆசீா்வாதத்தையும் வாா்த்தைகளால் எடுத்துரைப்பது கடினம். அதனை நம்மால் உணர மட்டுமே முடியும். அம்மாவின் வழிகாட்டுதலில் செயல்படும் கல்வி, மருத்துவம் நிறுவனங்கள் மனித சேவை மற்றும் சமூக நலத்துக்கு புதிய உயரத்தை அளித்தன.

தூய்மை இந்தியா திட்டம் தொடக்கத்தின்போது, அதை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல முன்னிலையில் நின்றவா்களில் அவரும் ஒருவா். கங்கை நதிக்கரையில் கழிப்பிடங்கள் கட்டுவதற்காக அவா் ரூ.100 கோடி நன்கொடை அளித்தாா். இது தூய்மை இயக்கத்துக்கு புதிய ஆற்றலை அளித்தது.

அவரைப் பின்பற்றுபவா்கள் அனைத்து நாடுகளிலும் உள்ளனா். இதனால், இந்தியாவின் பிம்பத்தையும் புகழையும் அவா் பலப்படுத்தியுள்ளாா்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com