தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

சோனியா காந்தியுடன் அசோக் கெலாட் சந்திப்பு! ராஜஸ்தான் தேர்தல் குறித்து ஆலோசனை?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்  சந்தித்துப் பேசி வருகிறார். 

News image

கோப்புப்படம்

Updated On :10 அக்டோபர் 2023, 12:01 pm IST

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்  சந்தித்துப் பேசி வருகிறார். 

ராஜஸ்தான், மிஸோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் நவம்பா் 7-ஆம் தேதி முதல் தொடங்கி வெவ்வேறு நாள்களில் நடைபெற இருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறும் எனத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதன்படி, ராஜஸ்தானின் 200 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வரும் நவம்பா் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

மேலும் நேற்று தில்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

இதையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் , காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசி வருகிறார். 

சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. 

நேற்று தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே பாஜக, 5 மாநிலத் தேர்தல்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

எனவே, தேர்தல் பணிகள், வேட்பாளர்கள் குறித்து இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.