காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சந்தித்துப் பேசி வருகிறார்.
ராஜஸ்தான், மிஸோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் நவம்பா் 7-ஆம் தேதி முதல் தொடங்கி வெவ்வேறு நாள்களில் நடைபெற இருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறும் எனத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.
இதன்படி, ராஜஸ்தானின் 200 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வரும் நவம்பா் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
மேலும் நேற்று தில்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் , காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசி வருகிறார்.
சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
நேற்று தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே பாஜக, 5 மாநிலத் தேர்தல்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
எனவே, தேர்தல் பணிகள், வேட்பாளர்கள் குறித்து இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது.