

வடகிழக்கு மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சி வேட்பாளர்களுக்கிடையே பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மிசோரம் வந்துள்ளார்.
திரிபுராவின் தலைநகரம் அகர்த்தலாவிலிருந்து ஹெலிகாப்டரில் காந்தி ஐஸ்வால் வந்தடைந்தார். அவர் சன்மாரி சந்திப்பிலிருந்து அணிவகுப்பைத் தொடங்கினார். சுமார் 4.5 கி.மீ தூரம் வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் ஆதரவாளர்கள் கட்சிக் கொடிகளை அசைத்து நகரின் சாலைகள் வழியாக நடந்தார். சாலையின் இருபுறமும் காத்திருந்த மக்களைக் கை அசைத்து, நடைப்பயணத்தின்போது தன்னைச் சந்திக்க வந்தவர்களுடன் கைகுலுக்கி உரையாடினார்.
சிலர் காங்கிரஸ் தலைவருடன் செல்ஃபி(சுயபடம்) எடுத்துக் கொண்டனர். அணிவகுப்பின் போது பாரம்பரிய நடனங்களும் இடம் பெற்றன. பேரணி முடிந்த பிறகு ஆளுநர் மாளிகை அருகே நடைபெறும் பேரணியில் காந்தி உரையாற்றுகிறார்.
செவ்வாயன்று, அவர் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, ஐஸ்வாலில் செய்தியாளர்களிடம் பேச உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.