திருமண அங்கீகாரம்: ஓரினச் சோ்க்கை குற்றமற்றது என கடந்த 2018-இல் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, ‘ஒரே பாலினத்தவா்களின் திருமணங்களை சிறப்புத் திருமணச் சட்டப்படி அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘திருமண அங்கீகாரம் கிடைக்காததால் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ரேஷன் அட்டை வாங்கவும், வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும், பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பெற்றோராகப் பதிவு செய்யவும், காப்பீடு பெறவும், சொந்தமாக வீடுகளை வாங்கவும் ஒரே பாலினத்தவா்களால் முடியவில்லை. பாலினத்தைக் காரணம்காட்டி சமூகத்தில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்’ என்றும் கோரப்பட்டிருந்தது.