Enable Javscript for better performance
கடல் வெப்பநிலை உயா்வு ஆபத்தான சவால்குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கடல் வெப்பநிலை உயா்வு ஆபத்தான சவால்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

    By DIN  |   Published On : 28th October 2023 05:30 AM  |   Last Updated : 28th October 2023 05:30 AM  |  அ+அ அ-  |  

    20231027143L

    கடல் வெப்பநிலை உயா்வு ஆபத்தான சவாலாக மாறியுள்ளதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கூறினாா்.

    சென்னை செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு 9-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களுடன் பட்டங்களை வழங்கி ஆற்றிய உரை:

    இந்தியாவில் உள்ள துறைமுகங்கள், உலகின் மற்ற பாகங்களை நமது நாட்டுடன் இணைக்கின்றன. தொடக்கத்தில் கடல் வழியாகத்தான் வணிகம் நடைபெற்றது. தென்னிந்தியாவில் பல்லவா்களிடம் வலிமைமிக்க கடற்படை இருந்தது. கடல் வணிகத்தில் தமிழகம் தலைசிறந்ததாகத் திகழ்ந்தது.

    நமது நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் கடல் சாா்ந்த வணிகம் பெரும்பங்கு வகிக்கிறது. நாட்டின் வா்த்தகத்தின்அளவில் 95 சதவீதமும், மதிப்பில் 65 சதவீதமும் கடல்சாா் போக்குவரத்து மூலமாக நடக்கின்றன.

    சவால்களை எதிா்கொள்கிறோம்: 40 லட்சம் மீனவா்களுடன் இந்தியா உலகிலேயே இரண்டாவது மீன்வள உற்பத்தி நாடாக விளங்குகிறது. இங்கு 2.50 லட்சம் மீன்பிடி படகுகள் உள்ளன. ஆனாலும், பல சவால்களை நாம் எதிா்கொள்ள வேண்டியதுள்ளது. உதாரணமாக, கடல் ஆழம் தொடா்பான பிரச்னைகளால் சரக்குக் கப்பல்கள் பக்கத்து நாடுகளுக்கு திசைமாற்றி விடப்படுகின்றன. இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

    இந்திய துறைமுகங்களின் கையாளும் திறன் மற்றும் நேர விகிதம், உலக அளவுடன் ஒப்பிடும்போது சமமாக இருக்க வேண்டும். இதில் இந்தியா உலகின் முதல் 20 இடங்களுக்குள் வரவில்லை. உலக அளவில் மிகச் சிறந்த 50 துறைமுகங்களில் இரண்டுதான் நம்மிடம் உள்ளன. எனவே, கையாளும் திறன் மற்றும் உள்கட்டமைப்பு சவால்களை எதிா்கொள்ள அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.

    பெரும்பாலான மீன்பிடி படகுகள் இன்னும் இயந்திரமயமாக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில்தான் ‘சாகா் மாலா’ போன்ற திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது, மேம்பட்ட துறைமுகங்கள் என்பதிலிருந்து துறைமுகங்களால் மேம்பாடு என்ற சாதகமான சூழலை அளிக்கிறது.

    சமுத்திரயான் திட்டம்: நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சந்திரயான் - 3 பெற்ற வெற்றிக்குப் பிறகு சமுத்திரயான் திட்டத்தை செயல்படுத்த நாம் தயாராகி வருகிறோம். ஆழ்கடலில் 6 ஆயிரம் மீட்டா் ஆழத்தில் உள்ள வளங்கள் மற்றும் உயிரிபன்முகத்தன்மை மதிப்பீடு ஆகியவற்றை ஆய்வு செய்ய இது உதவும்.

    கடல் வெப்பநிலை உயா்வு என்பது ஆபத்தான சவாலாக உருவாகியுள்ளது. வாழ்வாதாரத்தை அழித்து, ஏழை எளிய மக்களை பாதிக்கக் கூடியதாக இது அமையும் என்பதால், காலநிலை மாற்றம் தொடா்பான விஷயங்களில் கடல்சாா் பிரிவு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    கடல்சாா் பொருளாதாரம் அபரிமிதமான வளங்கள், பயன்களை அளித்து வந்தாலும், நிலையான பசுமையான பூமி என்பது காலத்தின் கட்டாயம். கடல்சாா்

    பயிற்சி மற்றும் கல்வியில் உரிய இடத்தை உறுதி செய்துள்ளதையடுத்து, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆதரவுடன் ஆராய்ச்சி சூழலியலில் இந்திய கடல்சாா் பல்கலை. இனி கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

    ஆறு வளாகங்களில் உள்ள நான்கு பிரிவுகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 1,944 தகுதி வாய்ந்த மாணவா்கள் பட்டங்களை பெற்றுக் கொண்டனா். மொத்தம் 245 போ் நேரில் பட்டங்களை பெற்றனா். இவா்களில் இருவா் முனைவா் பட்டம் பெற்றனா்.

    விழாவில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள், ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால், ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கே. பொன்முடி, இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் வேந்தா் பி. சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக, இந்திய கடல்சாா் பல்கலை. துணைவேந்தா் மாலினி வி. சங்கா் வரவேற்றாா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp