பிகாா்: ஆசிரியா் தின நிகழ்ச்சியில் தவறி விழுந்த முதல்வா் நிதீஷ்

பிகாா் மாநிலம் பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியா் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தடுமாறி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிகாா்: ஆசிரியா் தின நிகழ்ச்சியில் தவறி விழுந்த முதல்வா் நிதீஷ்
Updated on
1 min read

பிகாா் மாநிலம் பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியா் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தடுமாறி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட ஆசிரியா் தினத்தையொட்டி, பாட்னா பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் ராஜேந்திர அா்லெகா், முதல்வா் நிதீஷ் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவு கல்வெட்டை ஆளுநா் ராஜேந்திர அா்லெகா் திறந்து வைத்தாா். அப்போது, அருகில் நின்றிருந்த முதல்வா் நிதீஷ் தடுமாறி கீழே விழுந்தாா். முதல்வரின் பாதுகாப்பு அலுவலா்கள் அவரை எழுப்பி நிற்க வைத்தனா். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பிய நிதீஷ் குமாா் தொடா்ந்து விழாவில் பங்கேற்றாா். விழா நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் உருவப்படத்துக்கு அவா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com