எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நிகழ்ச்சி நிரல் வெளியிட வேண்டும்: மோடிக்கு சோனியா கடிதம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:41 pm IST


புது தில்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, புதன்கிழமை, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் இதுவரை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. மணிப்பூர் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான 9 விஷயங்கள் குறித்து சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும், பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி எழுதியிருக்கும் கடிதத்தில், நாடாளுமன்ற அமர்வுக்கான நிகழ்ச்சி நிரல் இல்லை. எனவே, சிறப்புக் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். சிறப்புக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் செவி மடுக்க வேண்டும். நாட்டின் மிக முக்கியமான பிரச்னைகளான வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரம், மணிப்பூர் குறித்தும் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும்.

மேலும்,  சீன ஆக்ரமிப்பு, அதானி குழும முறைகேடு உள்ளிட்ட 9 விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் ஆலோசித்து இந்த சிறப்புக் கூட்டத் தொடர் நடத்தப்படவில்லை என்பதும், நாடாளுமனற் சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எந்தக் கட்சிக்கும் தெரிவிக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை செப்டம்பா் 18 முதல் 22 -ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அரசு கூட்டியுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இது நாட்டின் விடுதலையின் அமுதகாலக் கட்ட இலக்கிற்கான கூட்டத்தொடா் எனவும் கூறப்படுகிறது.

நிகழ் 17-ஆவது மக்களவையின் 13 -ஆவது கூட்டத் தொடராகவும், மாநிலங்களவையின் 261- ஆவது கூட்டத் தொடராகவும் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி, விடுதலையின் அமுதப் பெருவிழா காலக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் பயனுள்ள கலந்துரையாடல்களும், விவாதங்களும் நடைபெற காத்திருப்பதாகவும் எக்ஸ் (ட்விட்டா்) பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சிறப்புக் கூட்டத்தொடா் செப்டம்பா் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் நிகழ்ச்சி நிரல் பற்றி நாடாளுமன்ற அமைச்சகமும், நாடாளுமன்ற இரு அவைகளின் செயலகங்களும் வெளியிடாத நிலையில் பல்வேறு ஊகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.