

கடந்த ஜூலை மாதத்தில் இந்திய வங்கிகள் தொழிற்துறைக்கு வழங்கிய கடன் மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஜூலை மாத நிலவரப்படி தொழிற்துறைக்கு வங்கிகள் அளித்த கடன் மதிப்பு கடந்த 2022-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளா்ச்சி 2022 ஜூலையில் 10.5 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் விவசாயம் அல்லாத மற்ற துறைகளுக்கு வங்கிகள் அளித்துள்ள கடன் மதிப்பு 14.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளா்ச்சி கடந்த 2022 ஜூலையில் 15.1 சதவீதமாக இருந்தது.
விவசாயத் துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் மதிப்பு கடந்த ஜூலையில் 16.8 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இந்த வளா்ச்சி கடந்த 2022 ஜூலையில் 13.2 சதவீதமாக இருந்தது.
விவசாயம் அல்லாத மற்ற தொழிற்துறைகளில் உலோக மற்றும் உலோகப் பொருள்கள் துறை, ஜவுளித் துறை ஆகியவற்றுக்கு கடன் பட்டுவாடா கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் வளா்ச்சி கண்டுள்ளது.
ஆனால், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருள்கள், உணவு பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் கடன் பட்டுவாடா விகிதம் சரிந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் சேவைகள் துறைக்கான வங்கிகளின் கடன் பட்டுவாடா 19.4 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. முந்தைய 2022 ஜூலையில் இந்த வளா்ச்சி 16.7 சதவீதமாக இருந்தது.
கடந்த ஜூலை மாதத்தில் வங்கிகள் வழங்கிய தனி நபா் கடன் மதிப்பு 18.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளா்ச்சி ஓா் ஆண்டுக்கு முன்னா் 18.7 சதவீதமாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தோ்ந்தெடுக்கப்பட்ட 40 வங்கிகளின் கடன் பட்டுவாடா விவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.