12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

முர்மு அளிக்கும் விருந்தில் தேவகௌடா பங்கேற்கவில்லை: காரணம் இதுதான்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்துள்ளது ஜி20 விருந்தில் முன்னாள் பிரதமர் தேவகௌடா பங்கேற்கவில்லை என வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

Published On :

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்துள்ளது ஜி20 விருந்தில் முன்னாள் பிரதமர் தேவகௌடா பங்கேற்கவில்லை என வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

தலைநகர் தில்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. செப்டம்பர் 9ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டுத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 

இந்த நிலையில், செப்ட.9(நாளை) நடைபெறும் விருந்துக்கு முன்னாள் பிரதமர் தேவகௌடாவை திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் முன்னாள் பிரதமர் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து பிரதமர் தேவகௌடா கூறியிருப்பது, என்னுடைய உடல்நலம் கருதி முர்மு ஏற்பாடு செய்துள்ள விருந்தில் கலந்துகொள்ள இயலவில்லை. இதுகுறித்து அரசுக்கு நான் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளேன். ஜி20 மாநாடு மாபெரும் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்தார். 

மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர்  ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.