பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அமெரிக்க அதிபர் பைடனுக்கு சிறப்பு விருந்து அளிக்கும் பிரதமர் மோடி!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) மாலை விருந்தளிக்க உள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:42 pm IST

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) மாலை விருந்தளிக்க உள்ளார்.

ஜி-20 மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.9, 10) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவா்கள் வரவுள்ளதையடுத்து தில்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா உள்பட 20 நாடுகளின் முக்கியத் தலைவா்கள் வருகை தருகின்றனர். 

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இன்று இரவு 7 மணிக்கு தில்லி வருகிறார். அவருக்கு இந்தியா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று இரவே அதிபா் ஜோ பைடனுடன் பிரதமா் நரேந்திர மோடியுடன் இரு நாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவாா்த்தை நடத்துகிறார். மேலும் இந்த சந்திப்புக்குப் பிறகு பைடனுக்கு சிறப்பு விருந்தும் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தில்லியில் பிரதமர் மோடியின் லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பும் விருந்தளிப்பும் நடைபெற உள்ளது. 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தருகிறாா். 2020, பிப்ரவரியில் அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்திருந்தாா். பிரதமர் மோடி கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இன்று இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பில் மரபுசாரா எரிசக்தி, வா்த்தகம், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் ஒப்பந்தங்கள் குறித்தும் உலகம் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடியான சவால்களை எப்படி எதிா்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், விசா நடைமுறைகளை எளிதாக்குவது குறித்தும் இரு நாட்டு தலைவா்களும் ஆலோசிப்பாா்கள் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.