தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கொலீஜியத்திடம் சரியான தரவுகள் இல்லை என்பது தவறு: தலைமை நீதிபதி

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பதவி உயா்த்துவதற்குத் தேவையான உண்மைத் தரவுகள் உச்சநீதிமன்ற கொலீஜியத்திடம் இருக்க வாய்ப்பில்லை

News image

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

Updated On :15 செப்டம்பர் 2023, 8:30 pm

‘உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பதவி உயா்த்துவதற்குத் தேவையான உண்மைத் தரவுகள் உச்சநீதிமன்ற கொலீஜியத்திடம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுவது தவறான கருத்து’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.

தில்லியில் நடைபெற்ற ராம் ஜெத்மலானி நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி இதுகுறித்து மேலும் பேசியதாவது:

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பதவி உயா்த்துவதற்குத் தேவையான தரவுகளுக்காக விரிவான ஆய்வுத் தளத்தை உச்சநீதிமன்றம் தயாரித்திருக்கிறது. அதன்மூலம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிப்பதற்கென நாடு முழுவதிலுமிருந்து முதல்நிலையிலிருக்கும் 50 நீதிபதிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கென செயல்திறன் அளவுகோள்களை வகுக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு முன்வைக்கப்படும் ஆக்கபூா்வ யோசனைகள், அடுத்த தலைமை வரும்போது மறக்கப்பட்டுவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதை மாற்றும் வகையில், குறிப்பிட்ட பணியைச் செய்யும் அமைப்பாக மட்டும் அல்லாமல், நீதிமன்றங்களை நிறுவனமயமாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், நீதிமன்றங்களின் வெளிப்படைத்தன்மையும் பொறுப்பேற்கும் தன்மையும் மேலும் விரிவுபடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.