ரூ.1.43 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 3 பேர் கைது!

ரூ.1.43 கோடி மதிப்புள்ள 4,773 கிலோ சரஸ் போதைப்பொருளுடன் 3 பேரை மும்பை காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.
ரூ.1.43 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன்  3 பேர் கைது!
Updated on
1 min read

மும்பை: ரூ.1.43 கோடி மதிப்புள்ள 4,773 கிலோ சரஸ் போதைப்பொருளுடன் 3 பேரை மும்பை காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.

மும்பை பாந்த்ரா குற்றப்பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வடாலா மேற்கு மற்றும் சேவ்ரியை சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.

சரஸ்களை விநியோகம் செய்ய வேறு மாநிலத்திலிருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்டதை நாங்கள் மீட்டு அவர்களை கைது செய்துள்ளோம்.

இந்த கடத்தல் நெட்வொர்க் குறித்த விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com