
கோப்புப்படம்
மேற்கு வங்கத்தில் டெங்கு பாதிப்பு 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை(செப்.25)-ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 38,181 ஆக உயர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் டெங்கு தொடர்பான இறப்புகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தாலும், பலியானோரின் உண்மை தகவலை சுகாதாரத்துறை வெளியிட மறுத்து வருகிறது.
வடக்கு வங்காளத்தில் பல பகுதிகள் குறிப்பாக மால்டாவில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது. வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு சிறப்பு கண்காணிப்பு வழக்கமான அடிப்படையில் நடத்தப்படுகிறது.
படிக்க: பிரதமரின் போபால் பேரணிக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்து: 39 பேர் காயம்!
மாநிலத் தலைநகரில் திடீரென அதிகரித்துவரும் பாதிப்புக்கு மத்தியில் கொல்கத்தா நகராட்சி சுகாதார மையங்களை வாரத்தில் 7 நாள்களுக்கு இயக்க முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...