எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மேற்கு வங்கத்தில் 38 ஆயிரத்தைத் தாண்டிய டெங்கு பாதிப்பு!

மேற்கு வங்கத்தில் டெங்கு பாதிப்பு 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :25 செப்டம்பர் 2023, 1:00 pm IST

மேற்கு வங்கத்தில் டெங்கு பாதிப்பு 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

திங்கள்கிழமை(செப்.25)-ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 38,181 ஆக உயர்ந்துள்ளது. 

நாளுக்கு நாள் டெங்கு தொடர்பான இறப்புகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தாலும், பலியானோரின் உண்மை தகவலை சுகாதாரத்துறை வெளியிட மறுத்து வருகிறது. 

வடக்கு வங்காளத்தில் பல பகுதிகள் குறிப்பாக மால்டாவில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது. வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு சிறப்பு கண்காணிப்பு வழக்கமான அடிப்படையில் நடத்தப்படுகிறது. 

மாநிலத் தலைநகரில் திடீரென அதிகரித்துவரும் பாதிப்புக்கு மத்தியில் கொல்கத்தா நகராட்சி சுகாதார மையங்களை வாரத்தில் 7 நாள்களுக்கு இயக்க முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.