மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தற்கொலை செய்துகொள்வதற்கான சிறந்த வழி எது? - கூகுளில் தேடிய இளைஞரை மீட்டது போலீஸ்

'தற்கொலை செய்வதற்கான சிறந்த வழி' எது என கூகுளில் தேடுவதாக இண்டர்போலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து 28 வயது இளைஞரை மும்பை போலீசார் கண்டுபிடித்து அவரது உயிரை காப்பாற்றியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 11:09 am

DIN


மும்பை: 'தற்கொலை செய்வதற்கான சிறந்த வழி' எது என கூகுளில் தேடுவதாக இண்டர்போலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து 28 வயது இளைஞரை மும்பை போலீசார் கண்டுபிடித்து அவரது உயிரை காப்பாற்றியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அந்த இளைஞர் பிரபல தேடுபொறியான கூகுளில் 'தற்கொலை செய்வதற்கான சிறந்த வழி' எது என பலமுறை தேடியுள்ளார். இதுகுறித்து சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான இண்டர்போலுக்கு தகவல் தெரிவித்துள்ளது கூகுள்.  

இதையடுத்து இளைஞரின் இருப்பிடத்தை அறிந்து, 2 மணி நேரத்தில் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளது இண்டர்போல். 

இண்டர்போல் பகிர்ந்த செல்போன் எண் தகவலின் அடிப்படையில், அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்த மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு பிரிவு போலீசார் விரைந்து சென்று மும்பை புறநகர் பகுதியான மல்வானியில் இருந்து செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்டனர். 

இதுகுறித்து அந்த இளைஞரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆறு மாதங்களாக வேலையில்லாமலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குற்ற வழக்கு ஒன்றில் மும்பையில் உள்ள சிறையில் உள்ள தனது தாயை மீட்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளானதால் மனஅழுத்தத்தில் இருந்த நான் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணம் மனதில் தோன்றியதால்,  இந்த முடிவை எடுத்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.