மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முதியோர் கட்டணச் சலுகை ரத்து: ரயில்வே ஈட்டிய கூடுதல் வருவாய் இவ்வளவா?

சலுகை ரத்து: ரூ.5,800 கோடி அதிக வருவாய் ஈட்டிய ரயில்வே

News image

மாதிரி படம்

Updated On :2 ஏப்ரல் 2024, 12:03 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரயில்வே அமைச்சகம், முதியவர்களுக்கான கட்டணச் சலுகையைத் திரும்ப பெற்றது. இதன் வழியாக ரூ.5,800 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

மார்ச் 20,2020 அன்று மத்திய ரயில்வே அமைச்சகம், முதியோர்களுக்கான ரயில் கட்டணச் சலுகையைத் திரும்ப பெற்றது.

அதற்கு முன்னர் ரயில் கட்டணத்தில் 58 வயதைக் கடந்த பெண்களுக்கு 50 சதவிகிதமும் 60 வயதைக் கடந்த ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு 40 சதவிகிதமும் சலுகையாக அளிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் வெவ்வேறு காலக் கட்டங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரயில்வே அமைச்சகத்திடம் பெற்ற தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளார்.

மார்ச் 20,2020 முதல் ஜன.31,2024 வரையிலான காலத்தில் மூன்று முறை அவர் பெற்ற தகவலின் அடிப்படையில் ஓட்டுமொத்தமாக ரூ.13,287 கோடி வருவாய், முதியவர்கள் பயணம் செய்ததன் மூலமாக ரயில்வே ஈட்டியுள்ளது.

அந்த முழு பயணக் கட்டணத்தில் சலுகை விலை நடைமுறையில் இருந்திருந்தால் ரூ.5,875 கோடி சலுகையாக அளிக்கப்பட்டிருக்கும்.

இந்த கூடுதல் கட்டணம் ரயில்வே துறையின் வருவாயை அதிகரித்துள்ளது.

முன்னதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வே ஒவ்வொரு பயணிக்கும் 55 சதவிகிதம் சலுகை விலையிலேயே சேவை அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

இது குறித்து கவுர், “தற்போதைய அரசு புதிய சலுகைகளை அளிப்பதற்கு பதிலாக முந்தைய சலுகைகளைத் திரும்ப பெற்று வருகிறது. இதன் மூலம் கரோனோ காலக்கட்டத்துக்கு முன்பு 55 சதவிகிதத்துக்கும் அதிகமாக அரசு சலுகையை அளித்தது தெரிய வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.