செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ரமலான் மாதத்தில் பிரியாணி விற்பனை: ஸ்விக்கி தகவல்!

ரமலான் மாதத்தில் ஸ்விக்கி வழியாக 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள்!

News image

மாதிரி படம் - Pixabay

Updated On :10 ஏப்ரல் 2024, 6:47 pm IST

ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி, ரமலான் மாதத்தில் ஏறத்தாழ 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது.

வழக்கமான மாதங்களை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் அதிகமான பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஹைதராபாத் முன்னிலையில் உள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான பிரியாணிகளும் 5.3 லட்சம் ஹலீம் ஆர்டர்களும் ஹைதராபாத்தில் பெறப்பட்டுள்ளன.

இப்தார் விருந்தில் முக்கிய அங்கமாக பாரம்பரிய உணவுகளான ஹலீம், சமோசா ஆகியவற்றுக்கு ஆர்டர்கள் குவிந்ததாகவும் மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை 34 சதவிகிதம் அதிகமான ஆர்டர்கள் வந்ததாகவும் ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது.

ஃபிர்னி, மால்புவா, ஃபலூடா, டேட்ஸ் ஆகியவற்றுக்குமான ஆர்டர்களும் அதிகமாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்தது.

ரமலானின் இனிப்புகளை அதிகமாக விரும்பும் பட்டியலில் மும்பை, ஹைதராபாத், கல்கத்தா, லக்னெள, போபல் மற்றும் மீரட் இடம்பெற்றுள்ளதாக ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.