திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுமென்றே இனிப்புகளை அதிகம் சாப்பிட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து பெயில் பெற முயற்சிப்பதாக அமலாக்கத் துறை அளித்த குற்றச்சாட்டை வழக்குரைஞர் மறுத்திருக்கிறார்.
அரவிந்த் கேஜரிவாலுக்கு வீட்டிலிருந்து சமைத்த உணவு வழங்கப்படுவதைத் தடுக்கவே, அமலாக்கத் துறை இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் கேஜரிவாலின் வழக்குரைஞர் விவேக் ஜெயின் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதோடு, மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவுகளை மட்டுமே அரவிந்த கேஜரிவால் சாப்பிடுவதாகவும் விவேக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமலாக்கத் துறை, கேஜரிவாலின் உணவு முறை குறித்து கேள்வி எழுப்பியதோடு, மாம்பழம், இனிப்புகள் என அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை அவர் வேண்டுமென்றே உணவில் சேர்த்துக்கொள்வதாகவும், அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டால் அதனைக் காரணம் காட்டி பிணை பெற முயற்சிக்கலாம் என்றும் குற்றம்சாட்டியிருந்தது.
தன்னை நீரிழிவு நோயாளி என்று கூறிக்கொள்ளம் அரவிந்த் கேஜரிவால், மாம்பழங்கள், இனிப்புகளையும் சர்க்கரை கலந்த தேநீரையும் சாப்பிடுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது அது பெயில் பெருவதற்கான வழியாகவே தோன்றுகிறது என்று குறிப்பிட்டிருந்தது.
வியாழக்கிழமை, கேஜரிவாலின் மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், அவரது சர்க்கரை அளவை பரிசோதித்து, மருத்துவரை ஆலோசிக்க அனுமதிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதற்கு அமலாக்கத்துறை இவ்வாறு குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து, கேஜரிவாலின் உணவு குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 எரிபொருளுக்கு எதிரான டவுன் ஹால் நிகழ்வில் பிரபல நபா் பங்கேற்பாா்: அரவிந்த் கேஜரிவால்

மாணவா் போராட்டத்தின்போது ஏகே-47 துப்பாக்கி பிரயோகம்: பாஜக மீது கேஜரிவால் சாடல்

ஆக்ஸட் 1 ஆம் தேதி தில்லியில் இ20க்கு எதிராக ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்: அரவிந்த் கேஜரிவால்

உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும் வாங்சுக்கின் முடிவுக்கு கேஜரிவால் வரவேற்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



