வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

News image
Updated On :24 ஏப்ரல் 2024, 10:01 pm IST

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கையிலிருந்து 5 இந்திய மீனவர்கள், இன்று மாலைக்குள் இந்தியா திரும்புவர் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது X பக்கத்தில் பதிவிட்டது.

இந்த மாத தொடக்கத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.

இந்தியா - இலங்கை இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், இலங்கை பிராந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக தெரிவித்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வருடம் இதுவரை இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் கூறப்படும் 23 இழுவை படகுகள் உள்பட 178 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

கடந்த ஆண்டு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக 240 இந்திய மீனவர்களையும், 35 இழுவைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.