2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

திரிபுராவில் உயர் வாக்குப்பதிவு; உ.பி.யில் குறைவு
2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

நாட்டின் மக்களவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நிறைவுற்ற நிலையில் பதிவான வாக்குகள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

5 மணி வரையிலான நிலவரப்படி திரிபுரா 77.53 சதவிகித வாக்குப் பதிவுடன் முன்னிலை வகித்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 52.74 சதவிகிதம் மட்டுமே வாக்குப் பதிவாகியுள்ளது.

மணிப்பூரில் 76.06 சதவிகிதமும் மேற்கு வங்கத்தில் 71.84 சதவிகிதமும் சத்தீஸ்கரில் 72.13 சதவிகிதமும் அஸ்ஸாமில் 70.66 சதவிகிதமும் பதிவாகியது.

மகாராஷ்டிரத்தில் 53.51 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. பிஹாரில் 53.03 சதவிகிதமும் மத்திய பிரதேசத்தில் 54.83 சதவிகிதமும் ராஜஸ்தானில் 59.19 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகின.

கேரளம், கர்நாடகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் முறையே 63.97, 63.90 மற்றும் 67.22 சதவிகித வாக்குகள் பதிவாகின.

வெள்ளிக்கிழமை 12 மாநிலங்களில் உள்ள 88 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

பல இடங்களில் வெயிலின் தாக்கம் கொடுமையாக இருந்துள்ளது. பீஹாரின் பல வாக்கு மையங்களில் 6 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது.

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜுன் 4 அன்று நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com