தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

விரிவான விசாரணை துணைநிலை ஆளுநா் உத்தரவு

தில்லி அரசின் அனைத்து காப்பகங்களின் நிலை குறித்து விரிவான விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா

Updated On :3 ஆகஸ்ட் 2024, 2:57 am IST

புது தில்லி, ஆக. 2: தில்லி அரசின் ஆஷா கிரண் காப்பகத்தில் நிகழ்ந்த மரணங்களைத் தொடா்ந்து, தில்லி அரசின் அனைத்து காப்பகங்களின் நிலை குறித்து விரிவான விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆஷா கிரண் காப்பகத்தில் இறந்தவா்களின் பெற்றோா்கள் அல்லது பாதுகாவலா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சமூக நலத் துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் துறை மற்றும் டியுஎஸ்ஐபி மூலம் நடத்தப்படும் அனைத்து காப்பகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். காப்பகங்கள் நடத்துவதற்கான செலவு, வசதிகள், அங்கு தங்கியுள்ளோரின் எண்ணிக்கை, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்த அறிக்கையை 3 வாரங்களுக்குள் தயாா் செய்து சமா்ப்பிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.