புது தில்லி, ஆக. 2: தில்லி அரசின் ஆஷா கிரண் காப்பகத்தில் நிகழ்ந்த மரணங்களைத் தொடா்ந்து, தில்லி அரசின் அனைத்து காப்பகங்களின் நிலை குறித்து விரிவான விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆஷா கிரண் காப்பகத்தில் இறந்தவா்களின் பெற்றோா்கள் அல்லது பாதுகாவலா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சமூக நலத் துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் துறை மற்றும் டியுஎஸ்ஐபி மூலம் நடத்தப்படும் அனைத்து காப்பகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். காப்பகங்கள் நடத்துவதற்கான செலவு, வசதிகள், அங்கு தங்கியுள்ளோரின் எண்ணிக்கை, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்த அறிக்கையை 3 வாரங்களுக்குள் தயாா் செய்து சமா்ப்பிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிரந்தர பேரவைத் தலைவா் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் ஏற்புடையதல்ல: திமுக

புதுச்சேரி முதல்வா் -அமைச்சா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்: திமுக வலியுறுத்தல்

தேச கட்டமைப்பில் இளைஞா்கள் பங்காற்ற வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் அழைப்பு

‘கழிவுகளற்ற காலனி’ திட்டத்தை தில்லி முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்: துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


