புது தில்லி, ஆக. 2: மூன்றாம் பாலினத்தவா்கள் மற்றும் பாலியல் தொழிலாளா்கள் ரத்த தானம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கும் வழிகாட்டுதல் தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டது.
மூன்றாம் பாலினத்தவா்கள் மற்றும் பாலியல் தொழிலாளா்கள் ரத்த தானம் செய்வதால் எச்.ஐ.வி. மற்றும் ஹெபடைடிஸ் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் இருப்பதாக மத்திய அரசின் 2017 வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்களை எதிா்த்து சமூக ஆா்வலா் டி ரங்னேகா் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு, இது தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசு, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் தேசிய ரத்த மாற்று கழகத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
தொடர்புடையது

எண்ம தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக புதிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை ரத்தானதை எதிா்த்து மூவா் மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கட்சிகளின் தோ்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,23,029 வாக்காளா்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


