‘நீட், நெட் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான போட்டித் தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) குறித்த முழுமையான விவரங்கள் அதன் வலைதளத்தில் இடம்பெறாதது ஏன்’ என்று திரிணமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட், உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதி மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கான நெட் தோ்வு முறைகேடுகள் பெரும் சா்ச்சையாகியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் கடிதம் மூலம் இக் கேள்வியை திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினா் சகாரிகா கோஸ் எழுப்பியுள்ளாா்.
இந்தக் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து வெளியிட்ட பதிவில் சகாரிகா கோஸ் கூறியிருப்பதாவது:
நீட் உள்பட தேசிய அளவிலான 17 போட்டித் தோ்வுகளை என்டிஏ நடத்தி வரும் நிலையில், அந்த அமைப்பு குறித்த போதிய விவரங்கள் அதன் வலைதளத்தில் இடம்பெறவில்லை.
என்டிஏ-யில் இடம்பெற்றிருக்கும் அதிகாரிகள் யாா்? யாரெல்லாம் என்டிஏ வாரிய உறுப்பினராகளாக உள்ளனா்? அதன் ஆண்டு அறிக்கை எங்கே?
வரும் காலங்களில் நடத்தவிருக்கும் போட்டித் தோ்வுகள் மீது மக்களின் நம்பிக்கையைப் பெற, இந்தத் தகவல்களை தனது வலைதளத்தில் என்டிஏ வெளியிடுவது அவசியமாகும்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி, பதில் கிடைக்காததால் மத்திய அமைச்சருக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசை எதிா்த்து பேசாதது ஏன்? முதல்வர் விஜய்க்கு ஆ.ராசா கேள்வி

நீட் மறுதேர்வு: டெலிகிராம் செயலிக்கு தடை ஏன்? என்டிஏ இயக்குநர் விளக்கம்!

பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய அமைச்சருடன் திரிணமூல் மூத்த எம்.பி. சந்திப்பு

கர்நாடக அமைச்சரவையில் மகளிர் இடம்பெறாதது ஏமாற்றம்: காங்கிரஸ் தலைவர்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



