தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

முண்டக்கை: முகவரி இருக்கிறது.. வீடுகள் எங்கே.. கடிதங்களுடன் அஞ்சல்காரர் தவிப்பு!

முண்டக்கை மக்களிடம் கடிதங்களை வழங்க முகாம்களின் சுற்றித்திரியும் அஞ்சல்காரர்.

News image

தபால்காரர் வேலாயுதம் வைத்திருந்த கடிதம் - Express

Updated On :8 ஆகஸ்ட் 2024, 11:20 am IST

நிலச்சரிவால் உருகுலைந்த முண்டக்கை முகவரிகளுக்கு வந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க அஞ்சல்காரர் அலைமோதி வருகிறார்.

ஒரு நாள் முழுவதும் இரண்டு முகவரிகளுக்கு வந்த கடிதத்தில் உள்ள நபர்களை தேடியதாகவும், இறுதியில் ஒருவரை கண்டுபிடுத்துவிட்டதாகவும் அஞ்சல்காரர் பி.டி. வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவில் முண்டக்கை தபால் நிலையம் மண்ணுக்குள் புதைந்த நிலையில், தற்காலிக தபால் நிலையம் சூரல்மலையில் புதன்கிழமை அமைக்கப்பட்டது.

முண்டக்கை அஞ்சல்காரர் வேலாயுதம், ‘சந்தோஷ், மடத்தில் வீடு, முண்டக்கை, வெள்ளரிமலை’, ‘அப்துல் ரஹிமான், சேரிபரம்பை. முண்டக்கை, வெள்ளரிமலை’ என்ற இரு முகவரிக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு உரியவர்களிடம் ஒப்படைக்க புறப்பட்டுள்ளார்.

முண்டக்கையில் வீடு இழந்த பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அனைத்து முகாம்களுக்கு காலை முதல் இருவரையும் தேடி அலைந்துள்ளார்.

இறுதியில், நிலச்சரிவில் காணாமல் போன அப்துல் ரஹிமானை கண்டறிய முடியாத நிலையில், நிலச்சரிவில் காயமடைந்த சந்தோஷ், வயநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதலில் அவருக்கு தகவல் கிடைத்தது.

ஆனால், அரபேட்டையில் உள்ள உறவினரின் இல்லத்தில் சந்தோஷ் இருப்பதை அறிந்த தபால்காரர், நாளை அவரிடம் கடிதத்தை அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 33 ஆண்டுகளாக முண்டக்கை அஞ்சல்காரராக பணிபுரிந்து வருகிறார் வேலாயுதம். தற்காலிக தபால் நிலையம் தொடங்கியவுடன், கடிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் தொலைபேசிகளை பலர் இழந்துள்ளதால், அவர்களின் உறவினர்கள் கடிதம் மூலம் தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். இதனால், முண்டக்கை தபால் நிலையத்தில் கடிதங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே நிலச்சரிவில் உயிர் தப்பிய தபால்காரர் வேலாயுதம், தனது வீட்டை இழந்த நிலையில், உறவினர் வீட்டில் இருந்து பணிக்கு திரும்பியுள்ளார்.

நிலச்சரிவில் யார் தப்பினார்கள்? யார் உயிருடன் இருக்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? என்ற பல்வேறு சூழலுக்கு இடையே கடிதங்களுடன் வேலாயுதத்தின் பயணம் தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.