ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

வயநாட்டில் விடைபெற்ற ராணுவ மீட்புக் குழு!

கரவோசை எழுப்பி கேரள மக்கள் பாராட்டு தெரிவித்தனர்

வயநாடு மீட்புக்கு உதவிய வீரர்கள் விடைபெற்ற போது - எக்ஸ் தளப் பதிவு

Published On :9 ஆகஸ்ட் 2024, 11:44 am IST

கேரளத்தின் வயநாடு மீட்பு நடவடிக்கைகளில் உதவிய வீரர்கள், பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றுச் சென்றனர்.

கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மக்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று, விடைபெற்றுச் சென்ற விடியோவை கொச்சி மக்கள் பாதுகாப்புத் தொடர்பின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த விடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விடியோவில், "நிலச்சரிவு மீட்பு நடவடிக்கைகளின்போது, உயிரையும் பணயம் வைத்த நமது துணிச்சலான வீரர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்கள் தைரியமும் தியாகமும் மறக்கக் கூடியதல்ல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், துணை ராணுவத்தின் சுமார் 120க்கும் மேற்பட்ட வீரர்கள், தங்கியிருந்த மவுண்ட் தாபோர் பள்ளியில் இருந்து விடைபெற்றுச் செல்லும்போது, பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் கரவோசை எழுப்பி, பாராட்டு தெரிவித்தனர்.

மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்த ராணுவ வீரர்களுக்கு, வயநாடு மாவட்ட நிர்வாகமும் விடைபெற ஏற்பாடு செய்தது.

வயநாட்டில் தொடா் கனமழையால் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உருக்குலைந்தன.

வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள், உயிரோடு புதையுண்டனா். இப்பேரழிவு, கேரளம் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.

நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனா். மேலும் பலரை காணவில்லை. எனவே, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 400-ஐ தாண்டக் கூடும். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டாலும், இன்னும் 138 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி ஆக. 10, சனிக்கிழமையில் கேரளத்தின் கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து கல்பெட்டாவுக்கு சென்று, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக சென்று ஆய்வு செய்யவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.