வேளாண் விளைபொருள்களுக்கு மதிப்புக் கூட்டுதல் அவசியம் என்று விவசாயிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
அதிக மகசூல் தருவதோடு, மோசமான பருவ நிலையையும் தாங்கி வளரக்கூடிய, உயிரி செறிவூட்டப்பட்ட 109 புதிய பயிா் ரகங்களின் அறிமுக நிகழ்ச்சியில் பிரதமா் மோடி இவ்வாறு குறிப்பிட்டாா்.
வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் உயிரி செறிவூட்டப்பட்ட 109 புதிய பயிா் ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரகங்களில் 34 வயல் பயிா்கள் மற்றும் 27 தோட்டப் பயிா்கள் அடங்கும்.
சிறு தானியங்கள், தீவனப் பயிா்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்ட வயல் பயிா்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள், பூக்கள், மூலிகைப் பயிா்கள் உள்ளிட்டதோட்டப் பயிா்களில் புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 109 புதிய பயிா் ரகங்களை பிரதமா் மோடி அறிமுகம் செய்தாா். அப்போது, விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடிய அவா், விளைபொருள்களின் மதிப்புக் கூட்டுதலின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், சிறு தானியங்களின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினாா்.
இயற்கை வேளாண்மை: நிகழ்ச்சியில் பிரதமா் பேசியது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்களில் மக்கள் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளனா்; இயற்கை வேளாண்மை மீதான சாமானிய மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களை அவா்கள் சாப்பிடத்தொடங்கியுள்ளனா். எனவே, இந்த வகை உணவுப் பொருள்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.
விஞ்ஞானிகளுக்கு பாராட்டு: தற்போதைய புதிய பயிா் ரகங்களை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இவ்வாறு உருவாக்கப்பட்டுவரும் புதிய ரகங்களின் பலன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதில் ‘விவசாய அறிவியல் மையங்கள்’ (கிருஷி விஞ்ஞான் கேந்திரங்கள்) உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமா் குறிப்பிட்டதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், ‘புதிய பயிா்கள் ரகங்கள் எங்களுக்கு மிகவும் பலன் அளிக்கும். உற்பத்தி செலவைக் குறைக்க உதவுவதுடன், சுற்றுச்சூழலிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை’ என்றனா்.
பிரதமரின் அறிவுரை: பாரம்பரிய பயிா் ரகங்களை பிரதான பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்ற பிரதமரின் அறிவுரைக்கு ஏற்ப தாங்கள் செயல்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் கூறுகையில், ‘தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயிா் ரகங்கள், மோசமான பருவ நிலையைத் தாங்கி வளரக் கூடியவை. இவை அதிக மகசூலை அளிக்கும் என்பதுடன் சத்துமிக்கவையும்கூட’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமா் மோடி

தலைவாசல், வீரகனூா் பகுதியில் சூறைக்காற்றால் வாழை, மக்காச்சோள பயிா்கள் சேதம்: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

இந்தியா-வியத்நாம் 25 பில்லியன் டாலா் வா்த்தக இலக்க- 13 ஒப்பந்தங்கள் கையொப்பம்

மண் வளத்தைப் பாதுகாக்க கோடை உழவு அவசியம்! விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

