குவைத்துக்கு பணிபுரிய சென்ற இந்தியர், முத்தலாக் கூறியதால் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ரஹ்மான் என்பவருக்கு ஃபரிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், குவைத்துக்கு பணிபுரிய சென்ற ரஹ்மான், அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளதாக, தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், குவைத்திலிருந்து மொபைல் போன் மூலம், ஃபரிதாவை தொடர்புகொண்ட ரஹ்மான், ஃபரிதாவிடம் முத்தலாக் கூறி, விவாகரத்தும் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஃபரிதா கடந்த மாதம், ரஹ்மான் மீது வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்ததாகக் கூறி, ஹனுமன்கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து, ரஹ்மான் இந்தியாவுக்கு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த காவல்துறையினர், ரஹ்மானை விமான நிலையத்திலிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

பாஜக இல்லாத தமிழகப் பேரவை அமைய வேண்டும்: நிர்மலா சீதாராமன் கணவர் பிரபாகர்!

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!

திருமணத்திற்காக பழங்குடி சிறுமி விற்பனை! கணவர் உள்பட 3 பேர் கைது!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


