400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகை நித்யா மேனன்

சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2024, 2:04 pm IST

70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2023 இல் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தற்போது சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு, சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவுக்கு ரவி வர்மனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான்

ஏ.ஆர். ரகுமான்

சிறந்த மலையாளத் திரைப்படமாக சவுதி வெள்ளக்காவும், சிறந்த கன்னடத் திரைப்படமாக கேஜிஎஃப்-2 ஆம் பாகமும், சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா-2 ஆம் பாகமும், சிறந்த ஹிந்தி திரைப்படமாக குல்மோஹரும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நடிகையாக, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனும், இந்தி படமான குட்ச் எக்ஸ்பிரஸ் படத்தின் மான்ஸி பரீக்குக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷுடன் நித்தியா மேனன் | ஜானி மாஸ்டர்

தனுஷுடன் நித்தியா மேனன் | ஜானி மாஸ்டர்

சிறந்த நடன காட்சிகளுக்காக திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பெண்ணே..பெண்ணே என்ற பாடலுக்காக ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்பறிவ்

அன்பறிவ்

சிறந்த சண்டைக் காட்சிகளுக்கு கேஜிஎஃப் 2 படத்திற்காக அன்பறிவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அளவில் சிறந்த திரைப்படமாக மலையாளத்தில் வெளியான 'ஆட்டம்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டம் திரைப்படம்

ஆட்டம் திரைப்படம்

சிறந்த நடிகருக்கான விருதுக்கு கன்னட மொழியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டியும், 12th பெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாசேவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த பாடகியாக சௌதி வெள்ளக்கா படத்திற்காக பாம்பே ஜெயஸ்ரீக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி பாடகராக, ஹிந்தி படமான பிரம்மாஸ்திரா படத்தின் இசையமைப்பாளர் அர்ஜித் சிங்குக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசைக்காக, ஹிந்திப் படமான பிரம்மாஸ்திரா படத்தின் பிரிதமுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசை வடிவமைப்பாளருக்காக, தமிழ்ப் படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசை வடிவமைப்பாளர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒப்பனைக்காக, வங்கமொழி படமான அபராஜிதோ படத்தின் ஒப்பனைக் கலைஞர் சோம்நாத் குண்டுவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.